sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலம்புழாவில் மலர் கண்காட்சி துவக்கம்

/

மலம்புழாவில் மலர் கண்காட்சி துவக்கம்

மலம்புழாவில் மலர் கண்காட்சி துவக்கம்

மலம்புழாவில் மலர் கண்காட்சி துவக்கம்


ADDED : ஜன 17, 2025 12:24 AM

Google News

ADDED : ஜன 17, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு, மலம்புழா பூங்காவில் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது.

கேரள மாநில நீர்ப்பாசனத் துறையும், மாவட்ட சுற்றுலாத்துறையும் இணைந்து, பாலக்காடு அருகேயுள்ள, மலம்புழா பூங்காவில் நடத்தும் மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மலம்புழா தொகுதி எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.

மலம்புழா ஊராட்சித்தலைவர் ராதிகா தலைமை வகித்தார். ஒரு வாரம் நடைபெறும் இக்கண்காட்சி, வரும் 22ம் தேதி நிறைவு பெறும். ஒரு லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருந்து உயர்தர மலர்களும் இடம் பெற்றுள்ளன.

ஆர்க்கிட், செண்டுமல்லி, சூரியகாந்தி, டெலிசியா, காஸ்மோஸ், டேலியா, பூகேன்வில்லியா, சால்வியா, பிரெஞ்ச் மேரிகோல்டு, பெட்டூனியா, வின்கா, ஜின்னியா, கிரிஸான்தமம், கோப்ரினா, மேரிகோல்டு, ஆஸ்டர் உள்ளிட்ட 30 வகையான மலர்கள் கண்காட்சயில் வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வண்ணத்தில் உள்ள ரோஜா பூக்கள் பூங்காவை அழகூட்டியுள்ளன. போட்டோ பாயின்ட், செல்பி கார்னர், வாட்டர் பவுண்டன், மியூசிக் பவுண்டன் ஆகியவையும் கண்காட்சியில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளன.

உணவுக் கண்காட்சி, ஸ்டால்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் செடி விற்பனை மையம் ஆகியவையும் இங்கு உள்ளன.






      Dinamalar
      Follow us