sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

/

வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

7


UPDATED : ஆக 25, 2025 04:28 PM

ADDED : ஆக 25, 2025 03:41 PM

Google News

UPDATED : ஆக 25, 2025 04:28 PM ADDED : ஆக 25, 2025 03:41 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாளை 26ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது முதல்முறையாகும்.

ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர் கப்பல்களும் திட்டம் 17 ஆல்பா (P-17A)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இரு அதிநவீன போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பது இதுவே முதல் முறையாகும். இந்தக் கப்பல்கள், முந்தைய ஷிவாலிக் ரக போர்க்கப்பல்களை விட 5 சதவீதம் பெரியவை. டீசல் இயந்திரங்கள் மற்றும் கேஸ் டர்பைன்களைப் பயன்படுத்தி இயக்கப்பட இருக்கின்றன. 76 மிமீ எம்ஆர் துப்பாக்கி, 30 மற்றும் 12.7 மிமீ ஆயுத கட்டமைப்புகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளில் சீனாவின் வளர்ந்து கடல் விரிவாக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடல் வர்த்தக பாதைகளை பாதுகாப்பது மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து ஆப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us