sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கன மழையால் கடும் நிலச்சரிவு; உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

/

கன மழையால் கடும் நிலச்சரிவு; உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

கன மழையால் கடும் நிலச்சரிவு; உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

கன மழையால் கடும் நிலச்சரிவு; உயிர்தப்பிய ஹிமாச்சல் முன்னாள் முதல்வர்

1


ADDED : ஜூலை 13, 2025 05:48 PM

Google News

1

ADDED : ஜூலை 13, 2025 05:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாண்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இருந்து பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்ற கார் அதிர்ஷ்டவசமாக தப்பியது. இதனால், அவர் உயிர்தப்பினார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை மற்றும் மேகவெடிப்பு காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மாண்டி மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டியில் மட்டும் 207 சாலைகள் உள்பட 249 சாலைகள் நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, ஹிமாச்சலில் உள்ள 12 மாவட்டங்களில் பல இடங்களில் ஜூலை 18ம் தேதி வரையில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெய்ராம் தாகூர் சென்ற கார், நிலச்சரிவில் இருந்து சிக்காமல் தப்பியது. மழையால் பாதிக்கப்பட்ட செராஜ் பகுதியில் உள்ள கர்சோக்கிலிருந்து துனாக்கிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஷங்கர் டெஹ்ரா எனும் பகுதியில் அவர் கார் சென்ற சாலையில் கற்கள் உருண்டோடி விழுந்துள்ளன.

உடனடியாக காரை விட்டு இறங்கிய ஜெய்ராம் தாகூர், வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்றார். இதன்மூலம், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார்.






      Dinamalar
      Follow us