sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

15,000 விநாயகர் பந்தல்களுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம்

/

15,000 விநாயகர் பந்தல்களுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம்

15,000 விநாயகர் பந்தல்களுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம்

15,000 விநாயகர் பந்தல்களுக்கு ஆந்திராவில் இலவச மின்சாரம்


ADDED : ஆக 27, 2025 03:17 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க, மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.

நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திராவின் பல்வேறு இடங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பாக வழிபாடு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட மாநில அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து, மாநில எரிசக்தி துறை அமைச்சர் ரவிகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள 15,000 விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதற்காக மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us