sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கும்பல் மோதல்: வாலிபர் கொலை 

/

கும்பல் மோதல்: வாலிபர் கொலை 

கும்பல் மோதல்: வாலிபர் கொலை 

கும்பல் மோதல்: வாலிபர் கொலை 


ADDED : பிப் 14, 2025 05:27 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெச்.எஸ்.ஆர்.லே - அவுட்: இரு கும்பல் இடையில் ஏற்பட்ட மோதலில், இரும்பு கம்பியால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு கோனப்பன அக்ரஹாராவில் வசித்தவர் நுாருல்லா, 32. இவர், கடந்த 10ம் தேதி இரவு நண்பருடன் டீ குடிக்க சென்றார். அப்போது டீக்கடை முன்பு, சில வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை நுாருல்லா தட்டி கேட்டார்.

இதனால் வாலிபர்களில் சிலர் நுாருல்லாவை தாக்கினர். கோபம் அடைந்த அவர், தனது நண்பர்கள் சிலரை போன் செய்து அங்கு வரவழைத்தார்.

இதையடுத்து இரு கும்பலுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

அப்போது அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து, நுாருல்லாவை தாக்கி விட்டு வாலிபர்கள் கும்பல் தப்பியது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நுாருல்லா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பலன் அளிக்காமல் நேற்று காலை இறந்தார்.






      Dinamalar
      Follow us