யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது சரக்கு லாரி மோதியது: உ.பி.யில் 4 பேர் பலி
யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது சரக்கு லாரி மோதியது: உ.பி.யில் 4 பேர் பலி
ADDED : டிச 16, 2025 09:44 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளாது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து பஸ்தி மாவட்ட போலீஸ் அதிகாரி, சஞ்சீவ் தியாகி கூறியதாவது:
உத்தரப் பிரதேசம் பஸ்தி மாவட்டம் ஹார்தியா சந்திப்பில் யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பஸ், சரக்கு லாரி மோதி சோகமான விபத்து ஏற்பட்டது இதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு பஸ்தி சதர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
பலியானவர்கள் இரண்டு பயணிகள், பஸ் டிரைவர், லாரி டிரைவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த பயணிகள் அப்துல்லா 60,முக்தார் அலி 75, சந்தீப் பாண்டே 32, இவர்கள் பஸ்தியை சேர்ந்தவர்கள்.
லாரி டிரைவர் சிவ் ராஜ் சிங், சித்தார்த் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர். காயமடைந்தவர்கள் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறுசஞ்சீவ் தியாகி கூறினார்.
அதிகாலை பயணம், நள்ளிரவு பயணம் தவிர்ப்பது நலம்.

