sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு

/

ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு

ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு

ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு

2


ADDED : ஜன 10, 2026 12:11 AM

Google News

ADDED : ஜன 10, 2026 12:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரான் அரசு ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புவதாக கூறி, அரசு ஊடக அமைப்பான ஐ.ஆர்.ஐ.பி., நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு மைய அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர்.

மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் அங்குள்ள மக்கள், கடந்த இரு வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் கூட்டத்தை கலைக்கவும், போராட்டங்களை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 28ம் தேதி துவங்கிய இப்போராட்டத்தில் இதுவரை, குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகி உள்ளனர்.

முடக்கம்



இந்நிலையில், இஸ்பஹான் நகரில் உள்ள ஐ.ஆர்.ஐ.பி., எனும் அரசுக்கு சொந்தமான வானொலி மற்றும் தொலைக்காட்சியின் ஒருங்கிணைந்த ஊடக மைய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தவறான செய்திகளை பரப்புவதாக கூறி அந்த அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தினர்.

மேலும் போராட்டக்காரர்கள், தெற்கு பகுதியில் உள்ள முக்கிய துறைமுக நகரான பண்டர் அப்பாசில், வீதிகளில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தடுக்க ஈரான் முழுதும் இன்டர்நெட் சேவை, தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

விலைவாசி உயர்வை காரணம் காட்டி துவங்கப்பட்ட இந்த போராட்டம், ஒரு பரந்த அரசியல் இயக்கமாக மாறி, ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கின்றனர்.

நாடு முழுதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதில், மக்களின் பங்கேற்பின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறது என, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிருப்தி



ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா ஷா பஹ்லவி ஆட்சியில் நிலவிய கடுமையான கட்டுப்பாடுகள், ஊழல் மற்றும் மேலைநாட்டு கலாசார திணிப்பு காரணமாக, மக்கள் அதிருப்தி அடைந்தனர். 1979ல் ஈரானில் புரட்சி வெடித்தது.

இதையடுத்து அவர், 1979 ஜன., 16ல் நாட்டை விட்டு வெளியேறினார். பின், 1979 பிப்ரவரியில், கமேனி தலைமையிலான அரசு அமைந்தது.

புதிய அரசு, மன்னராட்சியை ரத்து செய்தது. இதற்கிடையே, மன்னர் முகமதுவின், 17 வயது மகன் ரெசா பஹ்லவி, 1978ல், விமானப்படை பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

மன்னராட்சி ரத்து செய்யப்பட்டதால், அவர் நாடு திரும்புவது தடைபட்டது. 45 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள அவர், தற்போதைய போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது. Image 1519481

'அதிபர் டிரம்பை மகிழ்விக்க சொந்த நாட்டை சேதப்படுத்துகின்றனர்'


ஈரானில் நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக, அரசு தொலைக்காட்சி மூலம், அந்நாட்டு அரசின் உயர் தலைவர் அயதுல்லா சையத் அலி உசைனி கமேனி நேற்று ஆற்றிய உரை: மக்கள் அமைதியாக போராடுவதை அரசு ஏற்கும். ஆனால், வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு சக்திகளின் கூலிப்படையாக சிலர் செயல்படுகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்பை மகிழ்விக்க, சொந்த நாட்டையே சிலர் சேதப்படுத்துகின்றனர். டிரம்பிற்கு ஆட்சி நடத்த தெரிந்தால், அவர் முதலில் தன் சொந்த நாட்டில் உள்ள பிரச்னைகளை கவனிக்கட்டும். டிரம்பின் கைகள், 1,000 ஈரானியர்களின் ரத்தத்தால் கறை படிந்துள்ளன. ஈரானில் நடக்கும் போராட்டங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.



கமேனி தப்பி செல்லலாம்: டிரம்ப்


ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் உயர் தலைவர் கமேனி ரஷ்யாவுக்கு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து, அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: நாட்டை விட்டு வெளியேறி, கமேனி எங்காவது தப்பிச் செல்ல முயற்சிக்கலாம். ஈரானில் போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்படுவதையும், துாக்கிலிடப்படுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்காவின் பதிலடியை ஈரான் சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us