புதிய வருமான வரி மசோதா வாபஸ்; திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதிய வருமான வரி மசோதா வாபஸ்; திருத்தங்களுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ADDED : ஆக 08, 2025 05:39 PM

புதுடில்லி: பிப்.2025ல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்களுடன் மீண்டும் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பழமையான வருமான வரிச்சட்டம், 1961ஐ மாற்றும் அம்சமாக, இந்தாண்டு தொடக்கத்தில் லோக் சபாவில் வருமான வரி மசோதா 2025 அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்த மசோதா மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பற்றி டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (ஆக.8) விவாதிக்கப்பட்டது. இதில் பிப். மாதம் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி மசோதா, 2025ஐ திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாஜ எம்.பி., பைஜய்ந்த் பாண்டா தலைமையிலான 31 பேர் கொண்ட தேர்வுக்குழு, சட்டத்தில் சில மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. அவற்றை உள்ளடக்கிய புதிய வருமான வரி சட்ட மசோதா ஆக.11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.