sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

/

என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

என்னா ஒரு வில்லத்தனம்... 500 ரூபாய் நோட்டில் அனுபவம் கெர் படம்: குஜராத் தொழிலதிபர் பணம் ரூ.1.3 கோடி அம்போ!

22


UPDATED : அக் 01, 2024 01:32 PM

ADDED : அக் 01, 2024 10:33 AM

Google News

UPDATED : அக் 01, 2024 01:32 PM ADDED : அக் 01, 2024 10:33 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரியான மெஹூல் தக்கரிடம் மர்ம கும்பல் ஒன்று, பாலிவுட் நடிகரான அனுபவம் கெர் படம் அச்சிட்ட போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து, ரூ.1.3 கோடி மோசடி செய்துள்ளது. மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குஜராத்தில் பிரபல தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரி மெஹூல் தக்கர். இவருக்கு தெரிந்த ஜூவல்லரி மேலாளர் இடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எனக்கு தெரிந்த நபருக்கு 2 கிலோவுக்கு மேல் தங்கம் தேவைப்படுகிறது என கேட்டுள்ளார். 15 ஆண்டுகளுக்கு மேல் இருவருக்கும் வியாபார தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனால் அவரை நம்பிய தக்கரும் தங்கம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

அதன்படி ஜுவல்லரி மேலாளருக்கு தெரிந்த நபர்கள், தங்க நகை வியாபாரியான மெஹூல் தக்கரிடம் 1.6 கோடி மதிப்பில் 2100 கிராம் தங்கம் வேண்டும் என தொடர்பு கொண்டுள்ளனர். முதலில் 1.3 கோடி ரூபாய் பணம் அனுப்பிய நபர்கள் அடுத்த நாள் 30 லட்சத்தை தருவதாக கூறியுள்ளனர். இந்த 1.3 கோடி ரூபாய் பணத்தையும் 26 மூட்டைகளில் கட்டி அனுப்பியுள்ளனர். இதை நம்பி 2100 கிராம் தங்கத்தை மர்ம நபர்களிடம் வியாபாரி ஒப்படைத்துள்ளார்.

தங்கத்தை ஒப்படைத்த பிறகு, தக்கர் ஊழியர் ரூ. 1.3 கோடி பாதுகாப்பு வைப்புத்தொகையை ஆய்வு செய்ததில், அவை போலியான நோட்டுகள் என்பதைக் கண்டுபிடித்தார். மகாத்மா காந்தியின் படத்திற்குப் பதிலாக, அந்த நோட்டுகளில் பாலிவுட் நடிகர் அனுபவம் கெர் படம் இருந்தது. ரூபாய் நோட்டு கத்தை மேலே இருந்த வங்கி ரசீதில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ.,) என்பதற்குப் பதிலாக 'ஸ்டார் பேங்க் ஆப் இந்தியா' என்ற முத்திரை இருந்தது.

மோசடியை உணர்ந்து, தக்கரும், ஜூவல்லர்ஸ் மேலாளரும் உஷார் ஆகி, தொடர்பு கொண்ட நபரை அழைத்தபோது, ​​​​அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இப்போது வழக்கை விசாரித்து வருகின்றனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து மோசடி செய்தவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அனுபவம் கெர் அதிர்ச்சி!

இந்த சம்பவத்தை அறிந்த, பாலிவுட் நடிகரான அனுபவம் கேர், ' ரூ.500 நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக எனது புகைப்படம்? எதுவும் நடக்கலாம்' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us