sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துப்பாக்கி விற்றவர் கைது

/

துப்பாக்கி விற்றவர் கைது

துப்பாக்கி விற்றவர் கைது

துப்பாக்கி விற்றவர் கைது


ADDED : ஏப் 15, 2025 06:49 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:சட்டவிரோதமாக துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் டீக் நகரைச் சேர்ந்தவர் ஆஸ் முகமது,45. இவர் மீது ஏற்கனவே, ஆயுதச் சட்டத்தின் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்றதாக எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி, புதுடில்லி மது விஹார் காந்தா நாலா அருகே, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் ஆஸ் முகமது பிடிபட்டார். அவரிடம் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தன் கூட்டாளிகளான நஜர் மற்றும் ஷாகிர் ஆகியோருடன் சேர்ந்து, ராஜஸ்தானில் ஒரு மலைப் பகுதியில் துப்பாக்கிகள் தயாரித்து டில்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முழுதும் விற்பனை செய்வதாக ஒப்புக் கொண்டார்.

முகமது இதற்கு முன், ராஜஸ்தானில் ஏழு முறையும், ஹரியானாவில் ஒரு முறையும் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார்.

டில்லி போலீசார் விசாரணைக்குப் பின், ஆஸ் முகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us