sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்

/

கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்

கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்

கூர்க்கா மக்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறியது : சிதம்பரம், மம்தா முன்னிலையில் ஒப்பந்தம்


ADDED : ஜூலை 19, 2011 12:11 AM

Google News

ADDED : ஜூலை 19, 2011 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டார்ஜிலிங் : மேற்கு வங்க மாநிலத்தில், கூர்க்கா பகுதி தனி நிர்வாகத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது.

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் இப்பகுதியை, தனி மாநிலமாக பிரித்துக் கொடுக்கும்படி, நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர். முந்தைய இடதுசாரி அரசு, தனி மாநில கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கு பதில், டார்ஜிலிங் கூர்க்கா மலை கவுன்சில், சுபாஷ் கெய்சிங் தலைமையில் அமைக்கப்பட்டது.

எனினும், தனி மாநில கோரிக்கையை கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு வற்புறுத்தி வந்தது. இந்த கோரிக்கையை வற்புறுத்தி, தொடர்ந்து பந்த் அனுசரிக்கப்பட்டது. இதை மத்திய அரசு ஏற்கவில்லை, ஆனால், இப்பகுதி வளர்ச்சிக்கு வழிகாணும் வகையில், கூர்க்கா இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு தனி நிர்வாகம் அளிக்க, மம்தா தலைமையிலான புதிய அரசு முன்வந்தது.

இதையடுத்து, டார்ஜிலிங்கில் நேற்று, மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வர் மம்தா பானர்ஜி, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பிமல் குர்ராங் ஆகியோர் முன்னிலையில், கூர்க்கா பகுதி தனி நிர்வாகத்துக்கான முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேற்கு வங்க உள்துறை செயலர் கவுதமா, மத்திய உள்துறை இணை செயலர் கே.கே.பதக்,கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா பொதுச் செயலர் ரோஷன் கிரி ஆகியோர் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், 'கூர்க்கா தனி நிர்வாக பகுதியில் பல இன, மொழி, கலாசாரம் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். எனினும், இவர்கள்அனைவரும் இந்திய மக்கள். இதை கருத்தில் கொண்டு, இந்த நிர்வாகம் இவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த பகுதியின் முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்கும்' என்றார்.








      Dinamalar
      Follow us