sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

/

பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்


ADDED : மே 09, 2025 02:26 AM

Google News

ADDED : மே 09, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அருகே, பஸ்சில் ஆவணங்களின்றி கடத்தி வந்த, 1.66 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் அட்டப்பள்ளம் சுங்கச்சாவடி அருகே, நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் அஜய்குமார் தலைமையில், பாலக்காடு பிரிவு கலால் துறையினர் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, கோவையில் இருந்து, கொச்சி நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி நடத்திய சோதனையில், பயணி ஒருவர் பேக்கில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், ஆந்திரா மாநிலம் கர்ணூல் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி கசூலா, 52, என்பதும், ஆவணங்களின்றி 1.66 கோடி ரூபாய் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், தங்க வியாபாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து கொச்சிக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரிந்தது. அவரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்த கலால் துறையினர், தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us