sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை

/

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை

வட இந்தியாவில் நீடிக்கும் கடும் பனி; 2 நாட்கள் விமானங்கள், ரயில் சேவை பாதிக்கும் என எச்சரிக்கை


ADDED : டிச 22, 2025 09:27 AM

Google News

ADDED : டிச 22, 2025 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வட இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள், ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்நிலையில் மேலும் 2 நாட்களுக்கு விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: மூடுபனி 2 நாட்களுக்கு வட இந்தியா முழுவதும் நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கக்கூடும். மூடுபனியின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சூழலில், இன்று (டிசம்பர் 22) விமானங்கள், ரயில்கள் சேவை சற்று மேம்பட்டிருந்தாலும் திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாக சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்கு வருபவதற்கு முன்பு, தங்களது விமான நிலையை இணையத்தளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us