sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

/

இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

இதை கேட்டால் சிரிப்பு தான் வருது; சொல்கிறார் ஸோகோ ஸ்ரீதர் வேம்பு

11


UPDATED : பிப் 04, 2025 09:12 PM

ADDED : ஜன 30, 2025 10:12 AM

Google News

UPDATED : பிப் 04, 2025 09:12 PM ADDED : ஜன 30, 2025 10:12 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது. எனக்கு அரசியலுக்கு வர நேரமில்லை என ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான 'ஸோகோ'வின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வை தீவிரப் படுத்துவதற்காக நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்க உள்ளார்.

இந்நிலையில், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் அரசியலுக்கு வருவதாக, ஒரு செய்தி பரவி வருவதாக கேள்விப்பட்டேன். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்தது. நான் அரசியலுக்கு வருவதாக பரவும் செய்தி நகைப்புக்குரியது; அதற்கான எந்த வழியும் இப்போது இல்லை.

அடுத்த வாரம் ஆஸ்டினில் உள்ள தொழில்துறை ஆய்வாளர்கள் குழுவிற்கு AI பற்றிய எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தை பேசுவதற்கு நான் கடுமையான முயற்சி உடன் தயாராகி வருகிறேன். நான் அங்கு செல்வேன். தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் எனக்கு இப்போது மிகவும் சவாலான சூழல் இருக்கிறது.

எனக்கு நேரமும் இல்லை; நான் அரசியலுக்கு வருவது குறித்து யாரிடமும் இதுவரை எந்த விவாதமும் நடத்தவில்லை. அதை இந்த பதிவு தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன். மீண்டும் வேலைக்குச் செல்லுங்கள். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் கமெண்ட் செய்துள்ள தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை, 'நமது நாட்டு மக்களின் சிறந்த வாழ்க்கையை உறுதி செய்வதற்கும், தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்குவதற்கும் உங்கள் திறமை பாதுகாக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us