ADDED : மே 12, 2025 11:38 PM

மூணாறு : கேரளாவில் ஐந்து நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் ஐந்து நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்ததுடன் பல்வேறு மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' எச்சரிக்கை விடுத்தது.
இன்று (மே 13) இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், நாளை (மே 14) எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ., வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக ம் ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.