sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

/

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்

3


ADDED : ஆக 03, 2025 02:26 PM

Google News

ADDED : ஆக 03, 2025 02:26 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 03) முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் இன்று (ஆகஸ்ட் 03) பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் நாளை (ஆகஸ்ட் 04) பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 05) பெய்ய வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் இந்த நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us