sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்

/

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்

கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்; கோழிக்கோடு, வயநாட்டில் இன்று ரெட் அலர்ட்


ADDED : மே 28, 2025 09:19 AM

Google News

ADDED : மே 28, 2025 09:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று (மே 28) 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் கேரளாவில் மழை கொட்டி வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று (மே 28) 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளா மற்றும் லட்சத்தீவில் அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக வயநாடு, கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us