sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திஹார் சிறையில் முறைகேடு உயர் நீதிமன்றம் உத்தரவு

/

திஹார் சிறையில் முறைகேடு உயர் நீதிமன்றம் உத்தரவு

திஹார் சிறையில் முறைகேடு உயர் நீதிமன்றம் உத்தரவு

திஹார் சிறையில் முறைகேடு உயர் நீதிமன்றம் உத்தரவு


ADDED : அக் 31, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி திஹார் சிறையில் பணம் பறித்த அதிகாரிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டில்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

திஹார் சிறையில் நடக்கும் முறைகேடுகள் நடப்பதாகவும், கைதிகளை மிரட்டி சிறை அதிகாரிகள் பணம் பறிப்பதாகவும் தாக்கல் செய்யபட்ட மனு,

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மத்திய உள்துறை தலைமைச் செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஊழல் தடுப்புத் துறையுடன் இணைந்து இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக' கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கைதிகளிடம் பணம் பறித்த அதிகாரிகள் மீது விசாரணையை விரைந்து நடத்தி முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது தொடர்பாகவும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us