sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

/

வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது; சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

1


ADDED : பிப் 25, 2025 02:15 PM

Google News

ADDED : பிப் 25, 2025 02:15 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'வெளியுறவு விவகாரத்தில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது' என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வங்க தேசத்தில் ஹிந்துகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்கு வசிக்கும் ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, இன்று (பிப்.,25) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* வெளியுறவு விவகாரத்தில் தலையிட முடியாது. அண்டை நாட்டு விவகாரங்களில் நீதிமன்றத்தால் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்?

* இந்த நீதிமன்றம் வேறொரு நாட்டின் விஷயத்தில், அதுவும் ஒரு அண்டை நாட்டின் விஷயத்தில் தலையிட்டால் அது மிகவும் விசித்திரமாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துகளின் பாதுகாப்பு உறுதி செய்ய உத்தரவிட கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.






      Dinamalar
      Follow us