ADDED : அக் 11, 2025 07:32 PM

பாலக்காடு:மனைவி முகத்தை பெட்ஷீட்டால் அழுத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பெரிந்தல்மண்ணா ஆனமங்காடு பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் - சாந்தா தம்பதியரின் மகள் வைஷ்ணவி, 26.
இவருக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணபுரம் காட்டு குளத்தை சேர்ந்த தீக் ஷித், 26, என்பவருடன் திருமணமானது.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணி அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைஷ்ணவியை காட்டுகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வைஷ்ணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
ஸ்ரீகிருஷ்ணபுரம் போலீசார் வைஷ்ணவியின் உடலை திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில், வைஷ்ணவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிந்தது.
தீக் ஷிதிடம் நடத்திய விசாரணையில், அவர் வைஷ்ணவியை கொலை செய்தது உறுதியானது. தீக் ஷித்தை போலீசார் கைது செய்தனர்.