sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

/

8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்

8 மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்


ADDED : ஏப் 15, 2025 04:41 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விசாகப்பட்டினம் : ஆந்திராவில், குடும்ப தகராறில் எட்டு மாத கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அனுஷா, 27, ஞானேஷ்வர் என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பி.எம். பாலேம் பகுதியில் உள்ள உடா காலனியில் இருவரும் வசித்து வந்தனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வந்தது.

அதே சமயம், எட்டு மாத கர்ப்பமாக இருந்த அனுஷாவுக்கு தேவையானவற்றையும் ஞானேஷ்வர் செய்து வந்துள்ளார். இந்நிலையில், அனுஷா மற்றும் ஞானேஷ்வர் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது.

நிதானமாக துவங்கிய வார்த்தைப் போர் ஒரு கட்டத்தில் வேகமெடுக்க, வீட்டில் இருந்த கத்தியால் அனுஷாவை ஞானேஷ்வர் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், கர்ப்பிணியான அனுஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அனுஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஞானேஷ்வரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us