sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

/

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் கும்பமேளாவில் புனித நீராடியது மகிழ்ச்சி

2


ADDED : ஜன 29, 2025 07:47 PM

Google News

ADDED : ஜன 29, 2025 07:47 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹா கும்பநகர்:உத்தர பிரதேசத்தில் நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உ.பி.,யின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த 13ல் துவங்கியது.

பிப்., 26 வரை இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள நிலையில், இதுவரை, 10 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 42, மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக, பிரயாக்ராஜுக்கு நேற்று வந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் புனித நீராடினார்.

இதன் பின், செய்தியாளர்களிடம் மேரி கோம் கூறுகையில், ''மஹா கும்பமேளாவுக்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்த பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி. இது தான் என் முதல் அனுபவம்.

''நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கும்பமேளாவுக்கு ஆதரவு தெரிவிக்கவே இங்கு வந்தேன். இதில் பங்கேற்றது மகிழ்ச்சி,'' என்றார்.






      Dinamalar
      Follow us