sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய நீதிபதிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி பேச்சு

/

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய நீதிபதிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி பேச்சு

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய நீதிபதிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி பேச்சு

புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய நீதிபதிகளுக்கு நன்றி: பிரதமர் மோடி பேச்சு

8


UPDATED : டிச 03, 2024 03:03 PM

ADDED : டிச 03, 2024 02:38 PM

Google News

UPDATED : டிச 03, 2024 03:03 PM ADDED : டிச 03, 2024 02:38 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என பிரதமர் மோடி பேசினார்.

பஞ்சாப், சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் குடிமக்களின் லட்சியங்களை புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்ற வழி வகுக்கும். முந்தைய சட்டங்களின் நோக்கம் இந்தியர்களை தண்டிப்பதும், அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதும் ஆகும்.

துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், சுதந்திரம் அடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும், நடைமுறையில் இருந்துள்ளது. குடிமக்களை அடிமைகளாக நினைத்துப் பயன்படுத்தினர். நாம் ஏன் அந்த சட்டங்களைத் பின்பற்ற வேண்டும்.முந்தை ஆட்சியில் இருந்தவர்கள் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை. காலனித்துவ மனப்பான்மையில் இருந்து வெளி வர வேண்டும் என நினைத்து, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து தீர்மானம் போட்டேன்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏழு தசாப்தங்களில், நமது நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து சட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us