காங்., மேலிடம் அழைத்தால் டில்லி செல்வேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
காங்., மேலிடம் அழைத்தால் டில்லி செல்வேன்: கர்நாடக முதல்வர் சித்தராமையா
ADDED : ஜன 20, 2026 05:05 PM

பெங்களூரு: காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் டில்லிக்கு செல்ல தயராக இருக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே 2.5 ஆண்டுகள் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், காங்கிரஸ் அரசு தனது இரண்டரை ஆண்டு காலத்தை கடந்த 2025 நவம்பர் 20 அன்று நிறைவு செய்தது. இதனால் தலைமை மாற்றம் குறித்த ஊகங்கள் அதிகரித்துள்ளன.
சமீபத்தில் மூன்று நாட்கள் டில்லி பயணம் மேற்கொண்ட டி.கே. சிவக்குமார், கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
கர்நாடக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தொடர் ஜனவரி 22 அன்று தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்தத் தலைமைப் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
காங்கிரஸ் மேலிடம் அழைத்தால் டிலிக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:2028 சட்டமன்றத் தேர்தலை நோக்கமாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்படும். ராகுல் சரியான நேரத்தில் இறுதி முடிவை எடுப்பார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

