sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

/

இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி

8


ADDED : மார் 30, 2025 04:01 PM

Google News

ADDED : மார் 30, 2025 04:01 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: 'பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன்,' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்தார்.

பீஹார் மாநிலத்திற்கு விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இங்கு இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார்.

இந்நிலையில் பாட்னாவில் இன்று நடந்த அரசு விழாவில், மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் நிதிஷ்குமார் இருவரும் பல திட்டங்களை அறிமுகம் செய்துவைத்தனர்.

இந்த விழாவில் நிதிஷ்குமார் பேசியதாவது:

பா.ஜ.,வை இனி ஒரு போதும் கைவிட மாட்டேன். இரண்டு முறை தவறு செய்துவிட்டேன். இனி அந்த தவறு நடக்காது. இங்கு கூடிய உள்ள கூட்டம் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது.

முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் (ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி) என்ன செய்தார்கள்? அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றனர், ஆனால் சமூகங்களுக்கு இடையிலான மோதல்களை ஒருபோதும் நிறுத்த முடியவில்லை,

பீகாரில் பெயருக்குத் தகுந்த சுகாதாரப் பராமரிப்பு இல்லை. நல்ல கல்வி வசதிகள் இல்லை.

ஜேடியு-பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு,அனைத்து விஷயங்களும் மேம்படத் தொடங்கின. 90களின் நடுப்பகுதியில் இருந்து பா.ஜ கூட்டணியில் இருந்தோம். 2014ல் பிரிந்தோம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தோம். 2022ம் ஆண்டில், அவர் மீண்டும் பிரிந்தோம், இருப்பினும், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, மீண்டும் ஒரு முறை தலைகீழாக மாறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம்.

பா.ஜ..,வுடனான முறிவுக்கு எனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம்.அதனால் நான் இரண்டு முறை தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.






      Dinamalar
      Follow us