சட்ட விரோதமாக நடக்கும் ஆபாச பார்கள்; புதுச்சேரியில் வலுக்கிறது எதிர்ப்பு!
சட்ட விரோதமாக நடக்கும் ஆபாச பார்கள்; புதுச்சேரியில் வலுக்கிறது எதிர்ப்பு!
ADDED : ஆக 19, 2025 01:55 PM

புதுச்சேரி: 'அரைகுறை ஆடையுடன் வந்தால் பெண்களுக்கு நுழைவுக்கட்டணம் கிடையாது; அனுமதி இலவசம் என்று அறிவித்து சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சில்லரை மது விற்பனை கூடங்கள் மற்றும் பார்கள் 233 இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகள் இரவு 10:30 மணிவரை இயங்கி வந்தது. இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு 212 ரெஸ்டோ பார்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இந்த பார்கள் நள்ளிரவு 12 மணி இயங்கவும், பாடல் இசைக்கவிட்டு மது பிரியர்கள் நடனமாடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குடியிருப்புகளுக்கு மத்தியில் இத்தகைய பார்கள் திறக்கப்பட்டதால், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் சுற்றுலாவை ஊக்குவிக்கவே இப்படி பார்கள் திறக்கப்பட்டதாக அரசு கூறி வந்தது. இந்நிலையில் ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் செயல்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. காதை செவிடாக்கும் அளவிற்கு பாடல்களை ஒலிக்க விட்டு, ஆட்டம் போடுவதால் பார் சுற்று வட்டார குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அபராதம்
நள்ளிரவில் ஆய்வு
விதிகளை மீறி நள்ளிரவில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்களை கலால் அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர். அனுமதி நேரத்தை கடந்து இயங்கிய 14 ரெஸ்டோ பார்களின் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அரைகுறை ஆடை
ஆட்சியாளர்களுக்கு வேண்டிய ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அரசின் எந்த துறையின் அனுமதியும் பெறாமல் பாடல்களை ஒலிக்க விட்டு, அரைகுறை நடனம், ஆண், பெண் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஜோடியாக வந்தால்...!
இலவசமாகவே அனுமதிக்கின்றனர். இது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. எனவே, அனுமதியின்றி நடன நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும். இப்படி நிகழ்ச்சி நடத்தும் ரெஸ்டோ பார்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
''இத்தகைய பார்களில் முறையாக வரி வசூலித்தால் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் அரசுக்கு வரி வந்திருக்கும். ஆனால், ஊழல் காரணமாக, வரியே வசூலிக்கப்படுவதில்லை,'' என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பறிபோன உயிர்!
