sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

/

காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

காஷ்மீர் கவர்னருக்கு மன்னர் என நினைப்பு: அனல் பறந்த ராகுல் பிரசாரம்

59


ADDED : செப் 04, 2024 02:03 PM

Google News

ADDED : செப் 04, 2024 02:03 PM

59


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார்,' என காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள, 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்., 1ல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி வைத்து, காங்., போட்டியிடுகிறது.

3 கட்ட தேர்தல்

இந்நிலையில், தேர்தலுக்கான காங்., பிரசாரத்தை, அக்கட்சி தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இன்று துவக்கினார். ராம்பனில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: மாநிலங்களின் அதிகாரத்தை பா.ஜ., குறைக்கிறது. மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற பா.ஜ., திட்டமிட்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு, பிறகு ஜம்மு காஷ்மீர் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மாநில அந்தஸ்து

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி உறுதி செய்யும். இது மிகவும் அழகான இடம், அடுத்த கூட்டத்திற்கு செல்ல எனக்கு மனமில்லை. பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் ., வெறுப்பு, வன்முறை மற்றும் பயத்தை பரப்புவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் வரை பாதயாத்திரை நடத்தினோம். இன்று காஷ்மீரில் ஒரு ராஜா இருக்கிறார். உங்கள் பணம் வெளியாட்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் கவர்னர் தன்னை ஒரு மன்னர் போல் நினைத்து செயல்படுகிறார். இவ்வாறு ராகுல் பேசினார்.






      Dinamalar
      Follow us