sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

/

எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

எதிர்க்கட்சி தலைவர்களின் கைது நடவடிக்கையில் தலையிட தேர்தல் கமிஷன் மறுப்பு

4


ADDED : ஏப் 17, 2024 01:29 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 01:29 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் நோக்கத்துடன் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவதை தேர்தல் கமிஷன் தட்டிக்கேட்க வேண்டும் என, பல்வேறு எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்த நிலையில், 'சட்டம் மற்றும் நீதித்துறையின் செயல்பாட்டில் நாங்கள் குறுக்கிடுவது முறையல்ல' எனக்கூறி, தேர்தல் கமிஷன் ஒதுங்கிக் கொண்டது.

டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இது எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை முடக்குவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

விதிமீறல்


கெஜ்ரிவாலை போலவே பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் மத்திய விசாரணை அமைப்புகளால் ஊழல் வழக்கில் குறிவைக்கப்படுவதை தேர்தல் கமிஷன் தலையிட்டு தட்டிக்கேட்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் முறையிட்டன.

இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

குற்றவியல் வழக்கு விசாரணையில் அரசியல் தலைவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டு, அது நீதித்துறையின் பரிசீலனை மற்றும் உத்தரவுகளின் கீழ் இருக்கையில், அந்த விவகாரம் தேர்தல் கமிஷனில் முன்வைக்கப்படும்போது, அரசியலமைப்பு சாரம்சத்தின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் வழிநடத்தப்படுகிறது. தேர்தல் களத்தில் அனைவருக்கும் சரி சமமான வாய்ப்பு மற்றும் வேட்பாளர்களின் பிரசார உரிமைகளை பாதுகாப்பதில் தேர்தல் கமிஷன் உறுதியுடன் செயல்படுகிறது.

அதே நேரம், நீதித்துறை யின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவது முறையாக இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு மாத காலத்திற்கு தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொது வெளியில் முதல்முறையாக தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

அதன் விபரம்:

கடந்த ஒரு மாதத்தில், ஏழு அரசியல் கட்சிகளை சேர்ந்த 16 பிரதிநிதிகள் குழு, தேர்தல் கமிஷனரை நேரடியாக சந்தித்து புகார்கள் அளித்துள்ளன. கிட்டத்தட்ட 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை


அனைத்து அரசியல் கட்சிகளும் சரிசமமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. பா.ஜ., - காங்., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப் பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்களை பேசும் தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.

தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக இணையதளம் வாயிலாக 2.68 லட்சம் புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில், 2.67 லட்சம் புகார்கள் சராசரியாக 100 நிமிடங்களில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'விவிபாட்' வழக்கில் சுப்ரீம் கோர்ட்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள, 'விவிபாட்' எனப்படும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டு சீட்டுக்களை முழுமையாக எண்ண வேண்டும் என கோரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு மாறிய ஜெர்மனி போன்ற நாடுகள் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு மாறியதை மனுதாரர்கள் தரப்பு சுட்டிக் காட்டியது.இதை கேட்ட நீதிபதிகள், ஜெர்மனியின் மக்கள் தொகை ஆறு கோடி. நம் நாட்டின் வாக்காளர் எண்ணிக்கை 97 கோடி. இதில் 60 கோடி பேர் ஓட்டளித்தால் கூட அதை முழுமையாக எண்ணி முடிக்க எத்தனை நாள் ஆகும்' என, கேள்வி எழுப்பினர்.மேலும், 'வெளிநாட்டு நடைமுறைகளை நம் நாட்டுக்கு பொருத்தி பார்க்க முடியாது' என தெரிவித்த நீதிபதிகள், 'ஏதாவது ஒரு நடைமுறையை நாம் நம்பித் தான் ஆக வேண்டும். இருக்கும் நடைமுறை தேவையின்றி, குறைத்து மதிப்பிட வேண்டாம். 'ஓட்டுச் சீட்டு முறை புழக்கத்தில் இருந்தபோது, ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், ஓட்டுச் சீட்டில் முறைகேடு செய்தல் போன்ற நடவடிக்கைகள் அரங்கேறிய சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறோம்' என, தெரிவித்தனர். விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us