sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

/

விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

விசாரணை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாராட்டு

3


ADDED : நவ 13, 2025 07:08 AM

Google News

3

ADDED : நவ 13, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்:'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சந்தித்து பேசினர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'டில்லி கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக அமெரிக்க தரப்பில் உதவிகள் செய்ய முன்வந்தோம். ஆனால், விசாரணை நடத்தும் திறன் இந்தியாவிடம் உள்ளது. எனவே, அவர்களுக்கு நம் உதவி தேவையில்லை. அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்,' என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்து கொண்டார்.

முன்னதாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கவலை தெரிவித்திருந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் உடனடியாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியிருந்தது.






      Dinamalar
      Follow us