sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

/

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா

11


ADDED : மே 29, 2025 06:25 PM

Google News

ADDED : மே 29, 2025 06:25 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், '' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இதில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்நிலையில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மேற்காசிய நாடான ஈரானுக்கு நேற்று சென்றார். அவருடன் ராணுவ தளபதி சையத் அசீம் முனிரும் சென்றார்.

முதலில், அந்நாட்டு தலைவர் அயதுல்லா சையத் அலிகமேனியை சந்தித்து ஷெரீப் பேச்சு நடத்தினார். பின்னர், ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் ஆலோசனை நடத்தினார். இரு தலைவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “காஷ்மீர் பிரச்னை, நதிநீர் பகிர்வு, வர்த்தகம் என நீண்டகாலமாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்தியாவுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பினோம்.''இப்போதும் அமைதியையே விரும்புகிறோம். எங்கள் அமைதி வாய்ப்பை அவர்கள் ஏற்றுக் கொண்டால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம் என்பதை நேர்மையாகவும், தீவிரமாகவும் எடுத்துக் காட்டுவோம்,” என்றார்.

இது தொடர்பாக டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் குறித்த அணுகுமுறை என்பது இரு தரப்பிலானது என்ற நமது நிலைப்பாட்டில் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளோம். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரு சேர நடைபெறாது என்பதை மீண்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். பயங்கரவாதம் குறித்த கவலைப்படும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டிடம் அளித்த பயங்கரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்படும். காஷ்மீர் குறித்து இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் பேச்சுவார்த்தை என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்து மட்டுமே பேசப்படும்.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவை கைவிடும் வரை நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us