ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் பாக்., ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணியர்
ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் பாக்., ஆதரவு நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலா பயணியர்
ADDED : அக் 20, 2025 04:58 AM

புதுடில்லி: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அஜர்பைஜான், துருக்கி ஆகிய நாடுகளை இந்திய சுற்றுலா பயணியர் புறக்கணித்து வருவது தெரியவந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
கடும் கண்டனம் இதில், அப்பாவி மக்கள், 26 பேர் பலியாகினர். இந்திய சுற்றுலா பயணியரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற 'தி ரெசிஸ்டன்ஸ் முன்னணி' பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு 'ஆப்பரேஷன் சிந்----------------துார்' நடவடிக்கையை மேற்கொண்டது.
இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில், மேற்காசிய நாடான துருக்கி, 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய ரக விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
அதேபோல், இந்தியாவின், 'ஆப்பரேஷன் சிந்----------------துார்' நடவடிக்கைக்கு மேற்காசிய நாடான அஜர்பைஜான் கடும் கண்டனம் தெரிவித்தது.
போர் முடிந்த பின், ஆதரவு தெரிவித்த இரு நாடுகளுக்கும், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து, நம் நாட்டில் செயல்படும் வெளிநாட்டு பயணங்களுக்கு உதவும், 'மேக் மை ட்ரிப்' மற்றும் 'ஈஸ் மை ட்ரிப்' போன்ற நிறுவனங்கள், அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளின் பயணத்துக்கான சேவையை நிறுத்தியது.
அதேசமயம், ஆப்பரேஷன் சிந்----------------துார் நடவடிக்கைக்கு பின், அந்த இரு நாடுகளுக்கும் செல்வதை இந்திய சுற்றுலா பயணியர் தவிர்த்து வருகின்றனர்.
கடந்த ஜூன் - ஆக., மாதங்களுக்கு இடையில் அஜர்பைஜானுக்கு, 20,631 பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டில், இதே காலக்கட்டத்தில் 69,756 இந்திய பயணியர், அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.
38 சதவீதம் குறைவு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அஜர்பைஜானுக்கான இந்தியர்களின் பயணம், 70 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆக., வரையிலான காலத்தில், துருக்கிக்கு, 93,963 பேர் பயணித்தனர். இந்த ஆண்டு, அது, 58,544 ஆக குறைந்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில், இது 38 சதவீதம் குறைவு.
ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின், பாகிஸ்தான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு தரப்பில், எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்போ, உத்தரவோ வெளியிடப் படவில்லை.
இருப்பினும், அஜர்பைஜான் மற்றும் துருக்கி நாடுகளை இந்தியர்கள் புறக்கணித்தது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தரும் நாடுகளுக்கு அவர்கள் செல்ல விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறது.