sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

/

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்

2030க்குள் மின்சார வாகன சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை எட்டும்: நிதின் கட்காரி தகவல்


ADDED : டிச 04, 2025 04:09 PM

Google News

ADDED : டிச 04, 2025 04:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயை தொடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக லோக்சபாவில் அவர் கூறியதாவது: தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 - 25 மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் கார்களின் விற்பனை 20.8 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 33 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அதேபோல், பெட்ரோல், டீசல் கார்களின் கார்களின் விற்பனையும் 4.2 சதவீதமும், டூவிலர்களின் விற்பனையும் 14 சதவீதமும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 6 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2030 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். ஆண்டுக்கு 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் 400 க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்களின் ஸ்டார்ட் அப் சந்தையை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us