sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம்; அதிர்ஷ்டசாலி என இந்திய வீரர் சுக்லா நெகிழ்ச்சி!

/

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம்; அதிர்ஷ்டசாலி என இந்திய வீரர் சுக்லா நெகிழ்ச்சி!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம்; அதிர்ஷ்டசாலி என இந்திய வீரர் சுக்லா நெகிழ்ச்சி!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை பயணம்; அதிர்ஷ்டசாலி என இந்திய வீரர் சுக்லா நெகிழ்ச்சி!

4


UPDATED : ஜூன் 09, 2025 03:02 PM

ADDED : ஜூன் 09, 2025 02:36 PM

Google News

UPDATED : ஜூன் 09, 2025 03:02 PM ADDED : ஜூன் 09, 2025 02:36 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நாளை (ஜூன் 10) பயணம் செய்ய உள்ள நிலையில், ''நான் மிகவும் அதிர்ஷ்டசாலி'' என இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, பால்கன் 9 ராக்கெட் வாயிலாக நாளை (ஜூன் 10) இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, வரும் 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று, நாசா அறிவித்துள்ளது. சுபன்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது முதல் பயணத்திற்கான இறுதிக் கட்டத்தில் தயாராகி வருகிறார். இன்று (ஜூன் 09) சுபன்ஷூ சுக்லா குழுவினர் ஒத்திகை நடத்தினர்.

41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.

மிகவும் அதிர்ஷ்டசாலி!

இது குறித்து இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா கூறியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வது மிகவும் அற்புதமான பயணம். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us