இடைக்கால பட்ஜெட்; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
இடைக்கால பட்ஜெட்; அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
ADDED : ஜன 29, 2024 04:39 PM

புதுடில்லி: பார்லிமென்ட் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், நாளை (ஜன.,30) அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஆறாவது மத்திய பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்குகிறது. கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், நாளை(ஜன.,30) அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு வலியுறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.