sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னை போலீஸ் கமிஷனர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

/

சென்னை போலீஸ் கமிஷனர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை போலீஸ் கமிஷனர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

சென்னை போலீஸ் கமிஷனர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை

45


UPDATED : ஜன 27, 2025 11:53 PM

ADDED : ஜன 27, 2025 11:50 PM

Google News

UPDATED : ஜன 27, 2025 11:53 PM ADDED : ஜன 27, 2025 11:50 PM

45


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில், 'சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடரும். அதேநேரத்தில், சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பலாத்காரம் தொடர்பாக, ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் இருக்கிறார். இந்த விவகாரத்தில், சில விஷயங்கள் குறித்து ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, கட்சிகள் மற்றும் தனி நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையும் நடக்கிறது.

மேல் முறையீடு


அவற்றில் கடந்த மாதம் சில உத்தரவுகளை ஐகோர்ட் பிறப்பித்தது. பலாத்கார சம்பவம் பற்றி புலனாய்வு செய்ய மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைத்தும், மாணவிக்கு இழப்பீடாக, 25 லட்சம் ரூபாய் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கை தவறாக கையாண்டதற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதை மட்டும் ஆட்சேபித்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அதை, நீதிபதிகள் நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'போலீஸ் கமிஷனர் மீதான ஐகோர்ட்டின் கருத்துகளை ரத்து செய்வதுடன், அவருக்கு எதிரான உத்தரவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும்' என, வாதிட்டனர்.

அனைத்து ஆவணங்களையும் படித்து பார்த்த நீதிபதிகள், 'முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது? அதில் மாணவியின் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன. அது வெளியாக யார் காரணம்?

'அந்த தகவல்கள் இன்னும் இணையதளத்தில் இருக்கின்றன; அதை யார் யார் பரப்பினர்? அதை கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மேலும், 'இந்த விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார். அதற்கு என்ன காரணம்? தகவல்கள் இணையத்தில் கசிந்தது தெரிந்த பிறகும், எவ்வளவு நேரம் அதை பதிவிறக்கம் செய்யும் வகையில் நீக்காமல் இருந்தீர்கள்? இதில், இத்தனை கேள்விகள் எழுகின்றன.

'இதற்கு பிறகும், நீங்கள் என்ன உத்தரவை எங்களிடம் எதிர்பார்க்கிறீர்கள்?' என, நீதிபதிகள் கேட்டனர்.

பதில் அளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'விஷயம் தெரிந்ததுமே, எப்.ஐ.ஆர்., பதிவுகளை இணையத்தில் இருந்து நீக்கி விட்டோம். அது கசிந்ததற்கு காரணம், மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று அவர்களே கூறினர்.

'அதை கருத்தில் கொள்ளாமல், போலீஸ் கமிஷனருக்கு எதிராக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது' என்றனர்.

குளறுபடி


அப்போது குறுக்கிட்ட எதிர்தரப்பு வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தை போலீசார் கையாண்ட விதம் மொத்தமும் சட்டத்திற்கு புறம்பானது. இருந்தும், குளறுபடியில் சம்பந்தப்பட்ட போலீசாரையும் அரசு காப்பாற்ற விரும்புகிறது' என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், 'மாணவி விவகாரம் அரசியல் ஆவதை நாங்கள் விரும்பவில்லை. தமிழக அரசின் மனுவுக்கு எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

'சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடர்ந்து நடக்கலாம். போலீஸ் கமிஷனருக்கு எதிரான ஐகோர்ட்டின் கருத்துகளுக்கும், உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கிறோம்' என அறிவித்து, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை




பாலியல் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் போது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., நகலானது, பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

அதிலுள்ள விபரங்கள், வெளிநபர்களுக்கு தெரியாதபடி ரகசியம் காக்க வேண்டும். ஆனால், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., நகல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசார் தான், எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். அதனால், போலீசாரே, எப்.ஐ.ஆர்., நகலை வெளியிட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், சி.சி.டி.என்.எஸ்., எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே எப்.ஐ.ஆர்., வெளியில் கசிந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது, மாணவி பாலியல் வன்முறை வழக்கை, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள், எப்.ஐ.ஆர்., வெளியான விவகாரம் குறித்தும் விசாரிக்கின்றனர். முதலில் அவர்கள், அபிராமபுரம் காவல் நிலையத்தில் எழுத்தராக உள்ள போலீஸ்காரர் மருதுபாண்டியிடம் விசாரித்தனர்.

அவர், தான் தயார் செய்த எப்.ஐ.ஆர்., நகலை, அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் பிரதீப்பிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், பிரதீப்பிடம் நேற்று விசாரணை நடத்தினர். அடுத்ததாக, எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்த, 11 பேரிடமும் விசாரிக்க உள்ளனர்.

இன்ஸ்பெக்டரிடம் விசாரணை








      Dinamalar
      Follow us