ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்
ஆணாதிக்கம் பெண்கள் வளர்ச்சியை தடுக்கிறதா? நிர்மலா சீதாராமன் அளித்த 'நச்' பதில்
UPDATED : நவ 09, 2024 09:48 PM
ADDED : நவ 09, 2024 09:41 PM

புதுடில்லி: '' ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுத்தால், பிறகு எப்படி இந்திரா பிரதமர் ஆக முடிந்தது,'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிஎம்எஸ் வணிக கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: பெண்கள் விரும்பியதை ஆணாதிக்கம் தடுத்தால், பிறகு எப்படி இந்திரா நாட்டின் பிரதமர் ஆனார். ஆணாதிக்கம் பெண்களை தடுக்காது. முக்கியமாக இந்தியா போன்ற நாட்டில் அது நடக்காது. ஆணாதிக்கம், சுதந்திர போராட்ட வீரர்களான அருணா ஆசாப் அலி, சரோஜினி நாயுடு உள்ளிட்டவர்களை தடுக்கவில்லை.
ஆணாதிக்கம் என்பது இடதுசாரிகள் கண்டுபிடித்த கருத்து. பெண்கள் தர்க்க ரீதியாகவும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.