sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

/

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

மலேசியாவில் ஜெய்சங்கர், ரூபியோ சந்திப்பு; இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை

2


ADDED : அக் 27, 2025 09:22 AM

Google News

2

ADDED : அக் 27, 2025 09:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' அமைப்பில், இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உட்பட, 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டு ஆசியான் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு மலேஷியா வசம் உள்ளது. நாம் இந்த அமைப்பின் முக்கிய நட்பு நாடாக உள்ளோம். மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று துவங்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மலேஷியா சென்று இருக்கிறார். ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று காலை கோலாலம்பூரில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்கா- இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us