ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்; பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை
ஜம்முகாஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள்; பாதுகாப்புப் படையினர் கடும் துப்பாக்கிச் சண்டை
ADDED : ஜன 07, 2026 08:52 PM

ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
ஜம்மு காஷ்மீரில் கதுவா அருகில் உள்ள கஹோ என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலரின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை உறுதி செய்த பாதுகாப்புப் படையினர் அவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டு கொண்டனர்.
உடனடியாக அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு அவர்களும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அதே நேரத்தில் காமல்நல்லா பகுதியில் பயங்கரவாதியை கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தன்னுபரோ என்ற இடத்தில் இன்று காலை தென்பட்ட அதே பயங்கரவாதியாக இருக்கலாம் என்று கோணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்

