ADDED : நவ 08, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால், 40,000 கோடி ரூபாய் கடன் பெற, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
நிதித்துறை அமைச்சருமான, முதல்வர் சித்தராமையா, சமீபத்தில் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை இருப்பது தெரிந்தது. எனவே வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
வளர்ச்சி பணிகளுக்கு பணம் தேவைப்படுவதால், நவம்பர், டிசம்பரில் தலா 20,000 கோடி ரூபாய் கடன் பெற, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளது.