sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடக தமிழ் பள்ளிகள் நிலை; தகவல் கேட்கும் எஸ்.டி.குமார்

/

கர்நாடக தமிழ் பள்ளிகள் நிலை; தகவல் கேட்கும் எஸ்.டி.குமார்

கர்நாடக தமிழ் பள்ளிகள் நிலை; தகவல் கேட்கும் எஸ்.டி.குமார்

கர்நாடக தமிழ் பள்ளிகள் நிலை; தகவல் கேட்கும் எஸ்.டி.குமார்


ADDED : நவ 04, 2024 10:07 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு ; ''கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளி, கல்லுாரிகள் குறித்த தகவல்கள் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தாய் மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடகாவில் உள்ள அனைத்து தமிழ் பள்ளி, கல்லுாரிகள் குறித்த தகவல்கள் சேகரித்து உரிய நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

பள்ளியின் படங்கள், எந்த பகுதியில் உள்ளது, தற்போது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தமிழ் ஆசிரியர்கள் இருப்பு மற்றும் பற்றாக்குறை;

தமிழ்ப் பள்ளிகளின் கட்டடங்களின் தற்போதைய நிலை போன்ற பல தகவல்களை உடனடியாக சேகரித்து அனுப்புமாறு கர்நாடகாவில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழர் நலம் சார்ந்த அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us