sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

/

கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

கரூர் சம்பவம்; பார்லியில் தமிழில் பேசப் போகிறார் ஹேமமாலினி

21


ADDED : அக் 19, 2025 07:16 AM

Google News

21

ADDED : அக் 19, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, அஜய் ரஸ்தோகி விசாரணையைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ., சார்பில் ஹேமமாலினி தலைமையில், எம். பி.,க்கள் குழு கரூர் 'விசிட்' செய்து பாதிக்கப்பட்ட குடும் பங்களை சந்தித்து விசாரணை நடத்தியது; இது குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார் ஹேமமாலினி.

விரைவில், நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு வையும் சந்தித்து, கரூரில் பா.ஜ., குழு சந்தித்து சேகரித்த, விபரங்களை சமர்ப்பிக்க உள்ளாராம் ஹேமமாலினி.

பார்லிமென்ட்டின் குளிர்கால கூட் டத்தொடரில், கரூர் விவகாரம் நிச்ச யம் எழுப்பப்படும் என சொல்லப் படுகிறது. பா.ஜ., சார்பில் எம்.பி., ஹேமமாலினி பேசுவார் என, கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். தமிழில் தான் அவர் பேசப்போகிறாராம்.

பார்லிமென்ட்டில் விஜய்க்கு ஆதர வாக பேச, எம்.பி.,க்கள் யாரும் இல் லாத நிலையில், ஹேமமாலினி மறை முக ஆதரவு தருவதுடன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்க உள்ளாராம். இதற்கு பதிலடி தர, 'காங்கிரஸ் தரப்பில் ஜோதிமணி எம்.பி., தயாராக உள்ளார்' என சொல்லப்படுகிறது.

ஒரு வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்தாலோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் விசாரணை செய்து கொண்டிருந்தாலோ இந்த விவகாரம் குறித்து பார்லிமென்ட்டில் விவாதிக்கக் கூடாது' என்பது நடைமுறை. எனினும், 'அந்த விவகாரம் சார்ந்த பொதுக் கொள்கை குறித்து பொதுவாகப் பேசலாம்.

ஆனால், விசாரணையின் உண்மை விபரங்கள் அல்லது குற்றச்சாட்டு கள் மீது அலசல் வேண்டாம்' என, வழிகாட்டப்பட்டுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிப்பாரா... அப்படி அனுமதி அளித்தால் பெரும் அமளி நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்!






      Dinamalar
      Follow us