sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஊழல் தடுப்பு பிரிவு முன் கே.டி.ராமாராவ் ஆஜர்

/

ஊழல் தடுப்பு பிரிவு முன் கே.டி.ராமாராவ் ஆஜர்

ஊழல் தடுப்பு பிரிவு முன் கே.டி.ராமாராவ் ஆஜர்

ஊழல் தடுப்பு பிரிவு முன் கே.டி.ராமாராவ் ஆஜர்

1


ADDED : ஜூன் 16, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூன் 16, 2025 11:04 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத் :ஹைதராபாதில் நடந்த, 'பார்முலா - இ' கார் பந்தய வழக்கு தொடர்பாக, பாரத் ராஷ்ட்ர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமாராவிடம், தெலுங்கானா அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

சந்திரசேகர ராவ் தலைமையிலான முந்தைய பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின்போது, 2023ல், 'பார்முலா- - இ' கார் பந்தயம் நடத்தப்பட்டது. சந்திரசேகர ராவ் மகனும், அப்போதைய அமைச்சருமான கே.டி.ராமாராவ் நடத்திய கார் பந்தயத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கார் பந்தயம் நடத்திய வெளிநாட்டு நிறுவனத்துக்கு, அமைச்சரவை அனுமதியின்றி பணம் அளிக்க அங்கீகாரம் அளித்தார் என்பதே புகார்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மீறி, 45 கோடி ரூபாய் வரை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக தெலுங்கானா அரசுக்கு ரிசர்வ் வங்கி, 8 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து ராமாராவ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்காக, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன் ராமாராவ் ஆஜரானார்.

காலை 10:00 மணிக்கு துவங்கிய விசாரணை, மாலை 6:00 மணி வரை நடந்தது. ராமாராவிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

செய்தியாளர்களிடம் ராமாராவ் கூறுகையில், “இது ஒரு அரசியல் துன்புறுத்தல். ஒருவேளை அவர்கள் என்னை கைது செய்யலாம். தெலுங்கானா மாநில அந்தஸ்துக்காக முன்பே சிறை சென்றுள்ளேன். ஹைதராபாதின் பெயரை உலகறியச் செய்ய எடுக்கப்பட்ட முடிவிற்காக, 100 முறை கூட சிறைக்குச் செல்லத் தயார்,” என்றார்.






      Dinamalar
      Follow us