sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

/

கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

9


ADDED : ஏப் 23, 2024 02:58 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 02:58 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பிஆர்எஸ் கட்சி எம்.பி.,யும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர்.

இருவரும் திஹார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கவிதாவின் ஜாமின் மனு மே 2ம் தேதி அன்று டில்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் கெஜ்ரிவால் மற்றும் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 7 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்

டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கெஜ்ரிவால் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறையில் இன்சுலின் வழங்க வேண்டும் எனக்கூறி வந்தார். இந்த மருந்தை வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வந்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஐ தாண்டியதைத் தொடர்ந்து, இன்று அவருக்கு இன்சுலின் மருந்து வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us