sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

/

கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

கர்நாடகா விவகாரத்தில் அரசியல் செய்யும் பினராயி தேர்தலில் தோற்பார்: துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

1


ADDED : டிச 29, 2025 05:22 PM

Google News

1

ADDED : டிச 29, 2025 05:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதிலடி தந்துள்ளார்.

பெங்களூரு யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிச.,20ல் அகற்றப்பட்டன.பாதிக்கப்பட்ட மக்கள் புகாரை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வீடு இழந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.கர்நாடகா அரசின் நடவடிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்து இருந்தார். அவரின் செயலை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கண்டித்து இருந்தார்.

இந் நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் ஒன்றான பக்கீர் காலனிக்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் சென்றார். அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது;

கேரள முதல்வர் அரசியல் செய்கிறார். அவர் தேர்தலில் தோற்கப் போகிறார். இது ஒரு உள்ளூர் பிரச்னை. சுகாதாரக் கேடுகளிலிருந்து மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும்.

அரசு சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் ஆக்கிரமிப்பதை நாங்கள் விரும்பவில்லை. பெங்களூருவில் சேரிகள் வருவதை நாங்கள் விரும்பவில்லை. அரசு சொத்துக்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை, அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம்.

இவ்வாறு டி.கே. சிவகுமார் கூறினார்.






      Dinamalar
      Follow us