sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்

/

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கேரள அரசு பஸ்: 10 பேர் காயம்


ADDED : அக் 16, 2024 02:16 AM

Google News

ADDED : அக் 16, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி வாளரா அருகே கேரள அரசு பஸ் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர், கண்டக்டர் உட்பட பத்து பேர் பலத்த காயமடைந்தனர்.

இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள அடிமாலியில் இருந்து அடூருக்கு நேற்று மதியம் 2:00 மணிக்கு கேரள அரசு பஸ் புறப்பட்டு சென்றது. 15 பயணிகள் இருந்தனர்.

கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாளரா அருகே மதியம் 2:30 மணிக்கு சென்றபோது எதிரே வந்த சுற்றுலா பஸ்சிற்கு வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் டிரைவர் லத்தீப் 43, கண்டக்டர் மதுசூதனன் பிள்ளை 46, மற்றும் பயணிகள் மனு ஜோசப் 43, அரவிந்த்அஜி 29, ஜிம்மி சசீந்திரன் 46, மீனா 25, உட்பட பத்து பேர் பலத்த காயமடைந்தனர். அடிமாலி தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த பகுதி கடும் மலைச்சரிவு ஆகும்.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் மரம் தட்டி நின்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us