sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

/

அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

அணிவகுப்பு நிகழ்ச்சியில் யானைகள் படும் துயரம்; வேதனை தெரிவித்த கேரளா ஐகோர்ட்; கட்டுப்பாடுகள் விதிப்பு

8


ADDED : நவ 15, 2024 07:33 AM

Google News

ADDED : நவ 15, 2024 07:33 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: 'அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது.

கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயசங்கரன், கோபிநாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* அணிவகுப்பு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது.

* யானைகளை அணிவகுப்பு நிகழ்ச்சியில், பயன்படுத்தும் போது கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

* உடற்தகுதி சான்றிதழ்களை அரசு கால்நடை டாக்டர் மட்டுமே வழங்க வேண்டும்.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொது சாலைகளில் யானைகள் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை.

* யானையை ஒரு நாளில் 125 கி.மீ.க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. ஒரு நாளில் எந்த யானையையும் வாகனத்தில் 6 மணி நேரத்திற்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது.

* இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை யானையை வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது.

* இரண்டு யானைகளுக்கு இடையே குறைந்தபட்சம் 3 மீட்டர் தூரம் இருக்க வேண்டும்.

*வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கூடாது என கேரளா ஐகோர்ட் தடை விதித்துள்ளது.






      Dinamalar
      Follow us