sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'நிபா' வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை

/

'நிபா' வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை

'நிபா' வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை

'நிபா' வைரஸ் பரவலை தடுக்க கேரளா தீவிர நடவடிக்கை


ADDED : ஜூலை 08, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பாலக்காடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்து.

அப்போது அவர் பேசியதாவது:

நிபா வைரஸ் பாதித்த பெண், தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

நோய் பாதித்தவருடன், 173 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். அதில் முதன்மை தொடர்பு பட்டியலில், 100 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு பட்டியலில், 73 பேரும் உள்ளனர்.

மேலும், காய்ச்சல் உள்ள நான்கு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நோய் உறுதி செய்த நபரின் வீட்டை சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில், வெளிநபர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ், வவ்வால்களின் எச்சத்தை பரிசோதிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us