sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'கட்சி துவங்குவோம் ஆட்சியை பிடிப்போம்'

/

'கட்சி துவங்குவோம் ஆட்சியை பிடிப்போம்'

'கட்சி துவங்குவோம் ஆட்சியை பிடிப்போம்'

'கட்சி துவங்குவோம் ஆட்சியை பிடிப்போம்'


ADDED : மார் 18, 2025 10:43 PM

Google News

ADDED : மார் 18, 2025 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி : ''புதிதாக ஒரு பிராந்திய கட்சியை உருவாக்கி ஆட்சியை பிடிப்போம்,'' என, விவசாய சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் கூறி உள்ளார்.

கலபுரகியில் அவர் அளித்த பேட்டி;

மாநிலத்தில் காங்., -பா.ஜ., -ம.ஜ.த., உள்ளிட்ட எந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகள், தொழிலாளிகள், சாமானிய மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுவதில்லை.

இது போன்ற சூழல் தான் இன்று நிலவுகிறது. இதனால், விவசாயிகள் சங்கம், கன்னட அமைப்பு, தலித் இயக்கம், பெண்கள், மாணவர்கள் இயக்கம் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து பிராந்திய கட்சி உருவாக்கப்பட உள்ளது.

இதற்கு 'நவ கர்நாடக நிர்மாண் அந்தோலனா' என பெயர் சூட்டப்படும். தற்போது நடைமுறையில் உள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்பப் பெற சித்தராமையா அரசு தவறிவிட்டது.

மாநிலத்தில் 2013ல் வறட்சி ஏற்பட்டபோது, சித்தராமையா மத்திய அரசிடம் இருந்து 3,400 கோடி ரூபாய் நிவாரணம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கினார். தற்போது அது போன்று ஏன் செய்யவில்லை? கலபுரகி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us