sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கணவனை கொன்ற மனைவி உட்பட மூன்று பேருக்கு ஆயுள்

/

கணவனை கொன்ற மனைவி உட்பட மூன்று பேருக்கு ஆயுள்

கணவனை கொன்ற மனைவி உட்பட மூன்று பேருக்கு ஆயுள்

கணவனை கொன்ற மனைவி உட்பட மூன்று பேருக்கு ஆயுள்


ADDED : நவ 09, 2025 10:06 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக்ரா: கணவரைக் கொலை செய்த பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தாய்க்கு எதிராக மகன்கள் சாட்சியம் அளித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் தவுகியில் வசித்தவர் ராம்வீர்,32. அவரது மனைவி குஸ்மா தேவி.

இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுனில் என்ற வாலிபருடன் குஸ்மா தேவிக்கு தொடர்பு ஏற்பட்டது. கடந்த, 2019ம் ஆண்டு குஸ்மா தேவி, சுனில் மற்றும் சுனிலில் நண்பர் தர்மவீர் ஆகிய மூவரும் சேர்ந்து, ராம்வீரை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்தனர்.

இதுகுறித்து, ராம்வீரின் மாமா டிக்காராம் கொடுத்த புகார்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஆக்ரா கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

குஸ்மா தேவியின் இரண்டு மகன்களும் தங்கள் தாய்க்கு எதிராக சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவடைந்த நிலையில், மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி சஞ்சய் கே.லால் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us