மதுபான கொள்கை வழக்கு: டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்
மதுபான கொள்கை வழக்கு: டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் இன்று ஆஜர்
ADDED : ஜூலை 03, 2024 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் இன்று ஆஜராகிறார்.
டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டினை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து, திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலை கைது செய்தது.
இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் கெஜ்ரிவால் ஆஜராகிறார்.